Tuesday 26 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை இந்தியா-இலங்கை பேசி தீர்க்க வேண்டும் அ.தி.மு.க., தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேசி தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 27-08-2014,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகிறார்கள்.
சில நேரம் தமிழக மீனவர்கள் படுகொலையும் செய்யப்படுகின்றனர். அவர்களது மீன்பிடி வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதலும் செய்கிறது.
இப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க., தி.மு.க. வழக்கு
இது குறித்த கவலைகளை தெரிவித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கோரியும் அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளு மன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, தி.மு.க. முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-
                                                                                                                                       மேலும், . . . 

பா.ஜனதாவின் ஆட்சிமன்ற குழுவில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி திடீர் நீக்கம்

புதுடெல்லி, ஆகஸ்ட், 27-08-2014,
பா.ஜனதாவின் ஆட்சிமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும் திடீரென நீக்கம் செய்யப்பட்டனர்.
அமித்ஷா நடவடிக்கை
பா.ஜனதாவின் தேசிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்ட பின்பு, அவர் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் பா.ஜனதாவுக்கு துணைத் தலைவர்கள், இணை பொதுச் செயலாளர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு அணித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமித்ஷா கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பான ஆட்சிமன்ற குழுவை புதிதாக நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
மூத்த தலைவர்கள் நீக்கம்
இதையடுத்து நேற்று பா.ஜனதாவின் ஆட்சிமன்ற குழுவிற்கு புதிய உறுப்பினர்களையும் அவர் நியமனம் செய்தார்.
                                                                                                       மேலும், . . . . 

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளர் கைது சென்னையில் சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

சென்னை, ஆகஸ்ட், 27-08-2014,
சென்னையில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளரை சி.பி.ஐ. கைது செய்தது.
அதிரடி கைது
மத்திய அரசு நிறுவனமான கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் 2-வது மாடியில் செயல்படுகிறது. பதிவாளராக டாக்டர் மனுநீதி சோழன் (வயது 50) பணியாற்றுகிறார்.
தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள் இந்த அலுவலகத்தில்தான் பதிவு செய்யப்படுகின்றன. டாக்டர் மனுநீதி சோழன் மீது ஏற்கனவே நிறைய லஞ்சப்புகார்கள், சி.பி.ஐ. போலீசாருக்கு வந்தன.
இதனால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
                                                                                                                       மேலும், .. . . .

திருத்தணியில் பணத்துக்காக சிறுமியை கடத்திய 5 பேர் கைது 24 மணி நேரத்தில் சிறுமி மீட்பு

திருத்தணி, ஆகஸ்ட், 27-08-2014,
திருத்தணியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்திய 5 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, சிறுமியும் மீட்கப்பட்டாள்.
சிறுமி கடத்தல்
திருத்தணியில் உள்ள கலைஞர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 45). சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பபிதா (35), ஆந்திராவில் மத்திய அரசில் உயர்ந்த பதவியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ஹன்சிகா (4) திருத்தணி அருகில் உள்ள முரக்கம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.
ஹன்சிகா திங்கட்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி முடிந்தவுடன் பள்ளி பேருந்தில் ஏறி தனது வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து தனது தாத்தா சீனிவாசனுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் திடீரென அங்கு வந்து சிறுமியின் முகத்தில் கைக்குட்டை வைத்து வாயை பொத்தி கடத்திச் சென்றுவிட்டது.
சிறுமி மீட்பு
இதனால் பதற்றம் அடைந்த சீனிவாசன் உடனே ஹன்சிகாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
                                                                                               மேலும், . . . .  

No comments:

Post a Comment