Sunday 17 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-08-2014) காலை, IST- 10.00 மணி, நிலவரப்படி,

பதவி தப்புமா? என்ற அச்சத்தில், அமைச்சர்கள்

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
வரும், 23ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு புறப்பட்டு செல்கிறார். அங்கு சென்ற பின், கட்சியின் கொள்கை பரப்பு செயலர் பதவியில் யாரை நியமிப்பது, மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் சிலருக்கு, 'கல்தா' கொடுப்பது உட்பட, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரத்தில், தகவல் பரவி உள்ளது.
சுணக்கம் காட்டிய...
இதனால், தங்கள் பதவிகள் தப்புமா? என்ற அச்சத்தில், சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
                                                                                                                   மேலும், . . . 

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள அன்னாவரம் என்ற இடத்திலிருந்து, சென்னைக்கு ஒரு கும்பல், காரில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. போதைப்பொருள் கடத்தில் தடுப்பு போலீஸ் தென்மண்டல இயக்குனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். டாடா இன்டிகா காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வந்தது. ஆந்திராவில் இருந்து சென்னைக்குள் நுழையும் இன்டிகா கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை போட்டபடி இருந்தனர்.
குறிப்பிட்ட கார் ஒன்று, போலீஸ் சோதனையில் நிற்காமல் வேகமாக வந்து விட்டது. அந்த காரை போலீசார் விரட்டி வந்தனர்
                                                                                                          மேலும், . . . . 

சென்னை சாலிகிராமத்தில் அதிகாலையில் விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலையில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் கருகினர். படுகாயம் அடைந்த 3 பேரும் ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 3-வது தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை பாண்டியன்(வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(52). இவர்களுடைய மகன் அய்யப்பன்(34). இவர் அதே பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
அய்யப்பனின் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
                                                                                                                  மேலும், . . . . 

நெல்லை அருகே செங்கல் சூளையில் சாம்பலாகி கிடந்த உடல்: போலீஸ் விசாரணை

கடையம், ஆகஸ்ட், 18–08-2014
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சொந்தமான தோட்டம் கடையம் புலவனூரில் உள்ளது. அவரது தோட்டம் அருகே ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த கோவில்மணி என்பவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் சென்றுவிட்டனர்.
இன்று காலை வேலைக்காக தொழிலாளர்கள் வந்தனர். அப்போது செங்கல்சூளையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகள் எரிந்து கிடந்தது.
                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment