Sunday 24 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-08-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

மதுரையில் பயங்கரம்: தலையில் அம்மிக்கல்லை போட்டு வக்கீலை கொலை செய்த கள்ளக்காதலி போலீஸ் நிலையத்தில் சரண்

மதுரை, ஆகஸ்ட், 24-08-2014,
தூங்கிக்கொண்டு இருந்த போது, தலையில் அம்மிக்கல்லை போட்டு வக்கீல் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கள்ளக்காதலி போலீசில் சரணடைந்தார்.
மதுரையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வக்கீலுடன் தொடர்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கொல்லப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 36). வக்கீலான இவர் மதுரை கோர்ட்டுகளில் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
அவரது சொந்த ஊரின் அருகே உள்ள கே.கே.பட்டியை சேர்ந்தவர் கருணாகரன்.
                                                                                                  மேலும், . . . . 

மும்பையில் பட்டப்பகலில் பயங்கரம் தமிழ் வாலிபரை கடத்தி குத்திக்கொலை காரில் வந்து உடலை வீசிச்சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

மும்பை, ஆகஸ்ட், 24-08-2014,
மும்பையில் பட்டப்பகலில் தமிழ் வாலிபர் ஒருவர் கடத்தி குத்திக்கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடலை காரில் வந்து வீசி சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ் வாலிபர்
மும்பை வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் குடிசைப்பகுதியான நேருநகரில் சராசராம் தெருவில் வசித்து வரும் ராமனின் மகன் மாரியப்பன் என்ற மாரி (வயது38). இவர் மனைவி உமாமகேஷ்வரி மற்றும் 2 குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும்.
இந்நிலையில் மாரியப்பன் நேற்று தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தார்.
                                                                                                        மேலும், . . . . 
உலகின் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 14வது இடம் ரேங்கர் இணையதளம் கருத்துக்கணிப்பு

புதுடெல்லி, ஆகஸ்ட், 24-08-2014,
வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் யார் மிகவும் மோசமான மனிதர்கள் என்று வலைதளம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் மோசமான முதல் நபராக சோவியத் யூனியனை சேர்ந்த ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது.
                                                                                                     மேலும், . . .  

சென்னையில் நாளை விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சென்னை, ஆகஸ்ட், 24-08-2014,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 63–வது பிறந்தநாள் விழா நாளை (25–ந்தேதி) தே.மு.தி.க. சார்பில் கொண்டாடப்படுகிறது. மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தாமரை கண்ணன் தலைமையில் நாளை மதியம் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேட்டி–சேலைகள் வழங்கப்படுகின்றன.
மாணவ–மாணவிகளுக்கு நோட்டு–புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை மதியம் வடபழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் விசாகன்ராஜா, கூடல் ரமேஷ், டி.செல்வம், பூங்கா ரமேஷ், ஆயிரம் விளக்கு கோவிந்தன், திருவல்லிக்கேணி செந்தில் மற்றும் மாவட்ட பகுதி
                                                                                         மேலும், . . . 

No comments:

Post a Comment