Monday 2 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (03-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (03-12-2013) 

இஸ்லாமியர்கள் மீதான பொய் புகாரை வாபஸ் பெறாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டம்


நெல்லை, டிசம்பர், 03-12-13,
இஸ்லாமியர்கள் மீதான பொய் புகாரை வாபஸ் பெறாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்த போவதாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் அறிவித்துள்ளது.
செங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறபடுகிறது.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துல்காதர்மன்பை கூறியதாவது.செங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த 26ம் தேதி கபடி போட்டி நடந்தது. இதில் ஒரு தரப்பு மாணவர்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டனர்.


இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சாலை மறியலில் ஈடுபட்டதற்காக எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஹசன், கவுன்சிலர் சாகுல் ஹமீது, தமுமுக நகர தலைவர் முகமது இஸ்மாயில், மருத்துவ அணி செயலாளர் ஆரிப், ஐஎன்டிஜே. கோதரி பாவா ஆகியோர் மீதும், பிரச்சனையில் தலையிட்டு அவதூறாக பேசியதற்காக பா.ஜ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மீதும் செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                                                                                                            மேலும்........

No comments:

Post a Comment