Tuesday 24 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்


கிறிஸ்துமஸ் பெயர் சூட்டியது யார்?
ஆசியாவிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலில் ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்னும் இடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்த டிசம்பர் 25ம் நாள் பற்றிய விபரம், கி.பி.154ல், திருத்தந்தை ஜுலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமசை பிரெஞ்சு மொழியில், "நோயல்' ஜெர்மனியில், "வெய்நேக்ஷன்' ஸ்பெயினில் "நேவிடட்' , ஸ்காட்லாந்தில்," யூல்' , இத்தாலியில், "நாடோல்லே' என்று அழைப்பர். அமெரிக்காவைச் சேர்ந்த "டே' என்ற பெண்மணி தான், இயேசு பிறந்தநாளுக்கு "கிறிஸ்துமஸ்' என்று பெயர் சூட்டினார்.
1700 மொழிகளில் பைபிள்
பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே "பைபிள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் "வேதாகமம்' என்பர். "பிப்லியா' என்றால் "புத்தகம்' அல்லது "பத்திரம்' என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை.

                                                                                                           மேலும், . . . . .
இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு எல்லை கட்டுப்பாடுக்கோட்டை மீறுவது இல்லை என்று உறுதி
வாகா, டிசம்பர், 25-12-2013,
இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 14 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ‘எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டை மீறுவதில்லை’ என்று உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தான் வாலாட்டம்
இந்திய எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவது, அந்த நாட்டு படையினர் நமது ராணுவ முகாம் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வந்தது.                                                                       மேலும், . . . .

அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களை கொண்டது கருணாநிதி அறிக்கை

சென்னை, டிசம்பர், 25-12-2013,
அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களை கொண்டது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
                                                                                                                                  மேலும், . . . .

No comments:

Post a Comment