Saturday 21 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா கட்சிப்பணிக்காக, மேலும் சில மந்திரிகளும் விலகுகிறார்கள்
புதுடெல்லி, டிசம்பர், 22-12-2013,
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
அடுத்த ஆண்டு (2014) தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டது.
ஜெயந்தி நடராஜன்
இதனால், பொது தேர்தலை சந்திப்பதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரிகள் சிலரின் திறமையை கட்சி வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.
                                                                மேலும், . . . . . . . . 

ரத்தக்கண்ணீர் சிந்தவைக்கும் ஊழல் ‘எல்லா மட்டத்திலும் தன்னிச்சையான அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்’ ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
புதுடெல்லி, டிசம்பர், 22-12-2013,
எல்லா மட்டத்திலும் தன்னிச்சையான அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
ஊழல், மிகப்பெரிய பிரச்சினை
டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில், வர்த்தக சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசியதாவது:–
ஊழல் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏற்கனவே பிரச்சினைகளால் அல்லலுறுகிற மக்களை மேலும் ரத்தக்கண்ணீர் சிந்த வைக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலை ஒடுக்குவதற்கும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் உறுதி பூண்டுள்ளது.
                                                                                      மேலும், . . . . . 

மங்களூரில் மருத்துவ கல்லூரி மாணவன்–மாணவியை நிர்வாண படம் எடுத்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் 8 பேர் கைது
மங்களூர், டிசம்பர், 22-12-2013,
மருத்துவ கல்லூரி மாணவன்–மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ படம் எடுத்த கும்பல், படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியது. இதுதொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலைபோலீசார் ‘பொறி’ வைத்து பிடித்தனர்.
மங்களூரில் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.
மருத்துவ கல்லூரி
கேரளாவை சேர்ந்தவர் முகமது(வயது 21. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மங்களூர் அருகே தேரளகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் முகமதுவுடன் ஒரே வகுப்பில் படிப்பவர் அப்சரா(21 வயது. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோணஜே போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

                                                                                         மேலும், . . . . . . .


No comments:

Post a Comment