Saturday 14 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி அதிபர் உள்பட 3 பேர் படுகொலை 20 பேர் கும்பல் வெட்டிச் சாய்த்த கொடூரம்


நெல்லை, டிசம்பர், 15-12-2013,
ஆலங்குளம் அருகே கல்குவாரி அதிபர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வெட்டிச் சாய்த்தது.
நெல்லை மாவட்டத்தில்
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 47). விவசாயியான அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் காலில் அடிபட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். அவருடைய உறவினர் பூராஜா (65) வைத்தியலிங்கம் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அதேபோல் நேற்று மதியம் வைத்தியலிங்கம் வீட்டுக்கு வந்த பூராஜாவும், வைத்தியலிங்கமும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். வைத்தியலிங்கத்தின் மனைவி ரெஜினா வீட்டுக்கு முன்னால் நின்று தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.
3 பேர் படுகொலை
அப்போது திடீரென்று வீட்டின் பின்புறத்தில் சத்தம் கேட்டு ரெஜினா ஓடிவந்தார். அங்கு அவரது கணவரும், பூராஜாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது, ஒரு கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பி ஓடியது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, இலந்தைகுளம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். கல்குவாரியில் பிணமாக கிடந்தவர் நல்லூர் காசியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (53) என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–
                                                                                          மேலும், . . . . . .  

“கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்” தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.நேரில் விசாரணை

நெல்லை, டிசம்பர், 15-12-2013,
கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் நேரில் விசாரணை நடத்தினார்.
3 பேர் கொலை
ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. 2 கார்கள் உடைக்கப்பட்டன. ஒரு கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பக்கத்து ஊரான நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம், பூராஜா, கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் ஆகிய 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுமித் சரண் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
                                                                                                 மேலும், . . . . . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிப்பு 7 கட்டமாக ஓட்டுப்பதிவு தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

வாஷிங்டன், டிசம்பர், 15-12-2013,
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். எனவே பாராளுமன்ற தேர்தல் தேதியை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நாட்டு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.
                                                                                          மேலும், . . . . . .

No comments:

Post a Comment