Sunday 29 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2013) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பிரதமரிடம் சொல்லியும் பயனில்லை 22 மீனவர்கள் இலங்கை சிறை பிடித்தது
புதுக்கோட்டை, டிசம்பர், 29-12-2013,
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதாகவும், இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாகவும் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அடுத்த மறுநாளே 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் கோட்டைப்பட்டனத்தை சேர்ந்தவர்கள் 19 பேர் 5 விசைப்படகுகள், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்3 பேர், ஒரு விசைப்படகு. மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பி கொண்டிருந்தனர்.
                                                                                           மேலும், . . . . . 

35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7.16 கோடி மதிப்பில் ஆய்வகங்கள் அமைக்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை, டிசம்பர், 29-12-2013,
இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 7 கோடியே 16 லட்சத்து மதிப்பில், 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
                                                                                             மேலும், . . . .

சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்
வாஷிங்டன், டிசம்பர், 29-12-2013,
பங்குத்தொழிலில் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துகளையும் தர்மம் செய்துவிட்டு தனது 87-வது வயதில் ஒரு அமெரிக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன் தன்னிடம் மிச்சமிருந்த 100 மில்லியன் டாலர் சொத்துகளையும் லாப நோக்கில்லாமல் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனைகள் அளித்துவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்திற்கு அளிப்பதாக எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் 16-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
                                                                                                                                            மேலும் , . . 

No comments:

Post a Comment