Friday 27 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2013) மாலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

புத்தாண்டு விழாவில் மதுவிருந்து, நடனத்துக்கு கட்டுப்பாடு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை
சென்னை, டிசம்பர், 27–12-2013,
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்ட தொடங்கி உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அதேபோல் புத்தாண்டு தினத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி செல்வதால் விபத்துக்களும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இதனை கட்டுப்படுத்துவதற்கும், நட்சத்திர ஓட்டல்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.              
                                                                                                         மேலும், . . . .
வெளிநாட்டில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி வந்தது எப்படி?: மத்திய உள்துறை விசாரணை
புதுடெல்லி, டிசம்பர், 27–12-2013,
பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயுடன் 2011 முதல் இணைந்து ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத் தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அன்னா ஹசாரேயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா’’ அமைப்பில் இருந்து விலகினார். பிறகு அவர் கடந்த ஆண்டு (2012) நவம்பர் மாதம் 26–ந்தேதி ஆம்ஆத்மி கட்சி (சாதாரண மனிதர்களின் கட்சி)யைத் தொடங்கினார்.
ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. என்றாலும் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர கவனம் செலுத்தினார். அவரது கட்சிக்கு தேர்தலில் 70 இடங்களில் 28 இடங்களே கிடைத்தன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சியை அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
                                                                                                                                      மேலும், . . . 

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் ரஞ்சிதாவுக்கு இன்று தீட்சை வழங்கல்
பெங்களூரூ, டிசம்பர், 27–12-2013,
பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.
                                                                               மேலும், . . . .

No comments:

Post a Comment