Wednesday 18 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

விசா மோசடியில் சிக்கவைத்த சதி அம்பலம் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மன்மோகன்சிங் கண்டனம் துணை தூதர் தேவயானிக்கு கூடுதல் அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு


புதுடெல்லி, டிசம்பர், 19-12-2013,
அமெரிக்காவில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர், தேவயானி கோப்ரகடே (வயது 39).
பெண் தூதருக்கு கைவிலங்கு
அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, அமெரிக்க போலீசார் பெண் தூதர் தேவயானியை கைது செய்தனர். தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பும்போது வீதியில் அவரை கைது செய்த போலீசார், தேவயானிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
அத்துடன் அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்து அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
                                                                                           மேலும், . . . . . . 

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பணிந்தது பெண் தூதர் கைது விவகாரத்தில் மறு ஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு
வாஷிங்டன், டிசம்பர், 19-12-2013,
இந்தியப்பெண் துணை தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து, கைது நடவடிக்கை குறித்து மறு ஆய்வு செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
துணைத் தூதர்
அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றி வரும் தேவயானி கோப்ரகடே (வயது 39), விசா மோசடி செய்ததாக கடந்த 12–ந் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரது ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட அமெரிக்க அதிகாரிகள், அவரை போதை அடிமைகளுடன் அடைத்து வைத்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தேவயானி கோப்ரகடே, 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்து ஜாமீன் பெற்றார்.
                                                             மேலும் , .  . .  . . . . .

வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம்
புதுடெல்லி, டிசம்பர், 19-12-2013,
வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
லோக்பால் அமைப்பு
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவின் சிறப்பம்சங்கள் வருமாறு:–
லோக்பால் சட்டத்தின்கீழ் மத்தியில் லோக்பால் அமைக்கப்படும். மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்கப்படும்.
                                                                                   மேலும், . . . . . . .

No comments:

Post a Comment