Thursday 19 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,


40 தொகுதியிலும் வெற்றி பெற இலக்கு கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை, டிசம்பர், 20-12-2013,
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன.
அ.தி.மு.க. செயற்குழு
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா மாலை 3.05 மணிக்கு வந்தார். அவரை, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் பழனிப்பன் உள்பட மாநில நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
                                                                                      மேலும், . . . . . . 

‘தேவயானி மீதான வழக்கை வாபஸ்பெற வேண்டும்’ அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 20-12-2013,
தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது.
தேவயானி கைது விவகாரம்
விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில், நியூயார்க் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்டு, ஆடை அவிழ்த்து சோதனை நடத்தி, அவமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தப் பிரச்சினையில் கடுமையான நிலையையும் எடுத்துள்ளது.
ஜான் கெர்ரி வருத்தம்
இதுகுறித்து அறிந்ததும், ஆசிய பசிபிக் நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு விமானத்தில் நாடு திரும்பும் வழியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
                                                                                மேலும், . . . . . . . 

அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? ஜெயலலிதா பேட்டி

சென்னை, டிசம்பர், 20-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:–
                                                                                                  மேலும், . . . . . . . 

No comments:

Post a Comment