Tuesday 3 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (04-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (04-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் - அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை

தென்காசி, 04-12-2013,
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சேர்ந்தமரம் அருகே தன்னுத்து கிராமத்தில் உள்ள அருளப்பர் தேவாலயத்தில் நேற்று மின்சாரம் தாக்கி இருவர் பலியாகினர் . இந்த சாவில் மர்மம் இருப்பதாக கூறி இந்த பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மறியலில் ஈடுபட்டவர்களில் 16 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர். மேலும் தேவாலய நிர்வாகிகள் 3 பேரில் சவரிமுத்து கைது செய்யப்பட்டார். பீட்டர் அல்போன்ஸ் , ஜான்சன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் உடல் புளியங்குடி அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து காவல் பாதுகாப்போடு தன்னுத்து கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது . இறந்தவர்களின் உடலுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். தேவாலயத்தில் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படும் இருவரில் மணிகண்டனின் வாயில் நுரை இருப்பதால் சாவில் மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த சாவிற்கு நீதி விசாரணை கிடைக்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் இந்துக்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சனை இருப்பதாகவும் பல முறை இந்து மக்கள் காவல் ஆய்வாளர் விஜயகுமாரிடம் மனு கொடுத்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் வலுத்துள்ளது. எனவே காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                               மேலும்.....

No comments:

Post a Comment