Saturday 28 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2013) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார் டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு
புதுடில்லி, டிசம்பர், 28-12-2013,
டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது.
தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
                                                                                                                        மேலும், . . . . . 

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தீ குழந்தைகள் உள்பட 23 பேர் பலி
ஐதராபாத், டிசம்பர், 28-12-2013,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம் பென்னுகொண்டா இடையே கொத்தசேரவு ரெயில் நிலையம் வரும் போது திடீரென ஏ.சி. பெட்டியில் தீ பிடித்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பிடித்தது யாருக்கும் தெரியவில்லை.
ஏசி. பெட்டிக்குள் புகை பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகே பயணிகளுக்கு ரெயிலில் தீ பிடித்து இருப்பது தெரிய வந்தது. ஏ.சி. பெட்டியில் இருந்த பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள்.உடனடியாக ரெயில்நிறுத்த்பட்டது பயணிகள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

                                                                                                                        மேலும், . . . .  

கூடங்குளம் பகுதியில் ரூ.68.10 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம்-ஜெயலலிதா உத்தரவு

சென்னை, டிசம்பர், 28-12-2013,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடி யிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கூடங்குளம் அணுமின்
                                                                                       மேலும், . . . . 



No comments:

Post a Comment