Friday 13 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. மறுப்பு கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று நேற்று ஆளுனரை சந்தித்த பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ்வர்தன், தங்களுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என கூறினார்.

                                                              மேலும்.......

டெல்லியில் ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு பா.ஜனதா - ம.தி.மு.க. கூட்டணி உறுதியானது
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார்.

                                                                                 மேலும்.....

டெல்லியில் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு பரிசீலனை செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜனதா கூட்டணிக்கு 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்தன.
பா.ஜனதாவோ, ஆம் ஆத்மியோ ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆம் ஆத்மி கட்சி, ‘யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம், யாரிடமும் ஆதரவு கேட்கவும் மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’ என்று கூறியுள்ளது.

                                                                                 மேலும்,......

No comments:

Post a Comment