Friday 10 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

தற்போது விற்பனையில். . . . .




பாராளுமன்ற வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்தி தீவிரம் மாநிலம் வாரியாக குழு அமைப்பு தமிழக குழுவின் தலைவர் குலாம் நபி ஆசாத்
புதுடெல்லி, ஜனவரி, 11-01-2014,
பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் தேர்வுக்காக மாநிலம் வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு–புதுச்சேரி மாநில தேர்வுக்குழுவின் தலைவராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வேட்பாளர் தேர்வில் புதிய முறை
பாராளுமன்ற தேர்தல், ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்களை புதிய முறையில், முன்கூட்டியே தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக மாநில வாரியாக தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் தலைவர்களுடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்பாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, மக்களின் குரலை பிரதிபலிக்கும் விதத்தில் வேட்பாளர் தேர்வில் புதிய முறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது–
                                                                                மேலும், . . . . . 

வேட்பாளர்கள் தேர்வு முதல்வர் சென்னை திரும்பியதும் வெளியீட முடிவு கம்யூனிஸ்ட், சமக கூட்டணி உறுதி
சென்னை, ஜனவரி, 11-01-2014,
லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், கிட்டத்தட்ட தயாராகி விட்டது. கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர், சென்னை திரும்பியதும், பட்டியல் வெளியிடப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடம்இருந்து, அந்தக் கட்சி தலைமை, விருப்ப மனுக்களை வாங்கியது.
தலா மூன்று பேர்
கட்சி நிர்வாகிகளும், போட்டி போட்டு மனு அளித்தனர். இது தவிர, மாவட்டச் செயலர்களிடமிருந்து, தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள, தலா மூன்று பேரின் பெயர்கள், தொகுதி வாரியாக கேட்டு பெறப்பட்டன.பின், விருப்ப மனு கொடுத்தவர்கள், மாவட்டச் செயலர்கள் பரிந்துரைத்த நபர்களின் பின்னணி பற்றி அலசப்பட்டது. உளவுத்துறை மூலமும், அவர்களைப் பற்றிய தகவல் திரட்டப்பட்டது. உளவுத் துறையினர் கொடுத்த தகவல் பற்றி, இரண்டு நாட்களுக்கு முன், அமைச்சர்கள், பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் அடங்கிய நால்வர் அணியினர், மாவட்டச் செயலர்களை அழைத்து பேசினர். அதன் பின், முதல்வர் உத்தரவுப்படி, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இது பற்றி, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் அறையில், நால்வர் அணியினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களை அழைத்து ஆலோசித்தனர். அதனால், அமைச்சர் பன்னீர்செல்வம் அறை, பரபரப்பாக காணப்பட்டது. ஒவ்வொரு தொகுதி வாரியாக, அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் அழைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது.அவர்கள் தெரிவித்த விவரம், முதல்வரிடம் தெரிவிக்கப்பட உள்ளது. முதல்வர் கொடநாட்டிலிருந்து திரும்பியதும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                    மேலும், . . . . . 

மத்திய மந்திரிசபையில் மாற்றம் வருமா? பிரதமர் மன்மோகன்சிங்குடன் சோனியா, ராகுல் ஆலோசனை
புதுடெல்லி, ஜனவரி, 11-01-2014,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினார்கள். மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்வது குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
பிரதமர் வேட்பாளர் ராகுல்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, வருகிற 17–ந்தேதி நடைபெற இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் துணைத்தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த நிலையில், ராகுலுக்கு பொது மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது.

                                                                                                மேலும், . . . .

No comments:

Post a Comment