Tuesday 14 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா?
புதுடில்லி, ஜனவரி, 15-01-2014,
'பாகிஸ்தானில் மறைந்து வாழும், மும்பை தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டில்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, பலமுறை தடைவிதித்தார்' என, மத்திய உள்துறை, முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, "பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
                                                                                                                  மேலும், . . . .

தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம் அரசியல் கட்சிகள் புதுயுக்தி
சென்னை, 15-01-2014,
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வாக்காளர்கள், 5.37 கோடி. இவர்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், 23.49 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில், 30லிருந்து 39 வயதிற்கு உட்பட்டோர், 21.71 சதவீதம்.வாக்காளர் பட்டியலில், புதிதாக இடம் பெற்றுள்ள வர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள். அதனால், எஸ்.எம்.எஸ்., - எம்.எம்.எஸ்., இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான, பிரசாரங்களை மேற்கொண்டால், இவர்களை கவர முடியும் என, அரசியல் கட்சிகள் நம்புகின்றன.

                                                                                                               மேலும், . . . . .

டில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடில்லி, 15-01-2014,
டில்லி மாநில சட்ட அமைச்சரும், "ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி மீது, முக்கிய வழக்கு ஒன்றில், சாட்சியங்களை சீர்குலைத்ததாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபலமான வழக்கறிஞரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி, சட்ட அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், பா.ஜ., மற்றும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், சோம்நாத் பார்தி மீது, பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

                                                                                                              மேலும், . . . . 

No comments:

Post a Comment