Saturday, 18 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2014) மாலை,IST- 03.00 மணி,நிலவரப்படி,


கள்ளக்காதல் விவகாரமா? சசிதரூர் மனைவி சாவில் மர்மம் - கொலையா? டெல்லி போலீஸ் விசாரணை
புதுடெல்லி, ஜனவரி, 18-01-2014,
மத்திய மந்திரிசபையில் மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் சசிதரூர். 57 வயதாகும் சசிதரூர் 2010–ம் ஆண்டு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்ற 52 வயது பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் இது 3–வது திருமணம். இருவரும் ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்கள்.
இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளம்பியது. சமீபத்தில் சசிதரூக்கு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர்தரார் என்பவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டினார். கடந்த சில நாட்களாக ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரத்தை மறுத்த சசிதரூர் ‘‘நானும் சுனந்தாவும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் டுவிட்டரில் யாரோ போலியாக உருவாக்கிய பேச்சுக்களால் மனவேதனை அடைந்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.
                                                                                            மேலும், . . . . .


சென்னையில் நடைபெற இருந்த தமிழக- இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 27-தேதிக்கு ஒத்திவைப்பு - ஜெயலலிதா உத்தரவு


சென்னை, ஜனவரி, 18-01-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கச்சத்தீவையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த் தது தான். எனவே தான் கச்சத்தீவினை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகிறார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது அவர்களை மீட்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
                                                                                                மேலும், . . . . . .

மணி சங்கர் அலுவலகம் மீது தாக்குதல்
மயிலாடுதுறை, ஜனவரி, 18-01-2014,
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குறித்து கடுமையாக விமர்சித்த காங்., எம்.பி மணி சங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருபவர் மணிசங்கர் அய்யர்.

                                                                                                    மேலும், . . . . . .


No comments:

Post a Comment