Sunday 19 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2014) மாலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,



கள்ளக்காதல் தகராறில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுனந்தா மரணம் சசிதரூரிடம் போலீஸ் விசாரணை
புதுடெல்லி, ஜனவரி, 19–01-2014
மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்த சசிதரூர் அரசியலுக்கு திரும்பியது முதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். அரசியலில் நுழைந்த உடனேயே மத்திய மந்திரியானார்.
2 மனைவிகளை விவாகரத்து செய்த அவர் தனது 57–வது வயதில் 42 வயது பெண்ணான சுனந்தாவை 3–வது திருமணம் செய்தார்.
அடுத்த கொச்சி ஐ.பி.எல். அணியின் பினாமியாக செயல்பட்டதாக குற்றச் சாட்டுக்கு ஆளானார். இதனால் ஒரே வருடத்தில் மந்திரி பதவியை இழந்தார். அதன்பிறகு 2012–ல் மீண்டும் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு இடையேயான சமீபத்தில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வெடித்தது.
‘‘பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் எனது கணவரை பின் தொடர்கிறார். அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி. உங்களை விட்டு நான் பிரிந்து போக வைத்து விடாதீர்கள் சசி’’ என்று சுனந்தா கூறியிருந்தார்.
                                                                                                                         மேலும், . . . . .

தோல்வியில் இருந்து காப்பாற்றவே ராகுலை பிரதமர் வேட்பாளராக சோனியா அறிவிக்கவில்லை மோடி கேலி
புதுடெல்லி, ஜனவரி, 19–01-2014
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்றும் இன்றும் நடந்தது. நிறைவு நாளான இன்று உரையாற்றிய பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நடந்திருக்கலாம். ஆனால், 2014- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத பல பெரும் ஊழல்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற ஊழல்கள் இந்திய வரலாற்றில் இடம்பெற்றதே இல்லை.
                                                                                                  மேலும், . . . . 

காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் சேம.நாராயணன் புதிய கட்சி தொடங்கினார்

சென்னை, ஜனவரி, 19–01-2014
தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மக்கள் தேசிய கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா இன்று நுங்கம் பாக்கத்தில் நடந்தது. கட்சி தலைவர் சேம.நாராயணன் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
சேம நாராயணன் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்தவர். குலாலர் சங்க மாநில தலைவராகவும் இருந்து வருகிறார். கட்சி தொடங்கியது பற்றி அவர் கூறியதாவது:–

                                                                                            மேலும், . . . .

No comments:

Post a Comment