Thursday 23 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

உகாண்டா பெண்ணிடம் அத்துமீறியதாக புகார் டெல்லி சட்ட மந்திரி மீது நடவடிக்கை கிடையாது அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2014,
உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக டெல்லி சட்ட மந்திரி மீது புகார் எழுந்துள்ளது. இருப்பினும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சட்ட மந்திரி அத்துமீறல்
டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பார்தி, உகாண்டா நாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையில் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
                                                                           மேலும், . . . .

சாவில் மர்மம் நீடிப்பு சுனந்தா தரூர் வழக்கு, டெல்லி குற்றப்பிரிவுக்கு மாற்றம் மெல்லக்கொல்லும் விஷம் தரப்பட்டதா?
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2014,
சுனந்தா தரூர் சாவில் மர்மம் நீடிக்கும் நிலையில் வழக்கு, டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் தரப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்மச் சாவு
முதல் இரு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் மத்திய மந்திரி சசி தரூர் (வயது 57), மூன்றாவதாக சுனந்தாவை (52) திருமணம் செய்திருந்தார். 2 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில் சுனந்தாவுக்கும் சசி தரூர் மூன்றாவது கணவர். இவர்களின் 3 ஆண்டு கால இல்வாழ்வில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் புகுந்ததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சசி தரூர்–சுனந்தா இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, சுனந்தா கடந்த 17–ந் தேதி இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                                                       மேலும், . . . . 

எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிஷேகம் அவமதிப்பு செய்ததற்கு கண்டனம்





நெல்லை, ஜனவரி, 24-01-2014,
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள மறைந்த சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே ஐகோர்ட்டு விட்டுள்ளது. உள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் முத்துக்குமார் என்பவர், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு நேற்று செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்தார். இதை அறிந்த பாதுகாப்பு போலீசார் முத்துக்குமாரை கைது செய்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
                                                                                     மேலும், . . . .

No comments:

Post a Comment