Friday 31 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

கூடங்குளம் 3, 4–வது அணு உலை அமைக்க எதிர்ப்பு உதயகுமார் உள்பட 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்


நெல்லை, பிப்ரவரி, 01-02-2014,
கூடங்குளம் 3, 4–வது அணு உலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 11 பேர் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
காலவரையற்ற போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் 900 நாட்களை எட்டியது. இதற்கிடையே போராட்ட குழுவினர் மீண்டும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
                                                                                                                                மேலும், . . . 

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - பரிசீலித்து முடிவு


நெல்லை, பிப்ரவரி, 01-02-2014,
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் வெற்றி விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி மேலும் பேசியதாவது:
பணகுடி அருகே உள்ள இந்த மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையம், கேரளத்தில் உள்ள வலியமாலா அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தை தன்னாட்சி பெற்ற தனி மையமாக மாற்ற வேண்டுமென இங்கு பணியாற்றும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், பிரதமர் அலுவலகமும் பரிசீலித்து மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையத்துக்கு தனி வளாக அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை (பிப்.1) முதல் இந்த வளாகத்தின் நிர்வாகம் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்திய விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ரஷியா க்ரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்களை நமக்கு தர மறுத்ததும், முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் க்ரையோஜெனிக் என்ஜின்களை மிகவும் குறுகிய காலத்தில் நமது விஞ்ஞானிகள் உருவாக்கிக் காட்டினர். 2013-ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் உலகளவில் 4-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை 25 முறை ஏவியுள்ள இந்தியா, 24 முறை பெரும் வெற்றி கண்டுள்ளது. மங்கள்யான் மூலம் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியிலும் இந்தியா தனது இடத்தைப் பதிவு செய்துள்ளது.

                                                                                                                                  மேலும், . . .

அமெரிக்காவில், தரையில் வீசி குழந்தை கொலை தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் உள்பட 3 பேர் கைது

நியூயார்க், பிப்ரவரி, 01-02-2014,
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். கடந்த 16–ந் தேதி குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
                                                                                                                                              மேலும், . .



No comments:

Post a Comment