Monday, 27 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

சென்னையில், இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு இருநாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும்

சென்னை, ஜனவரி, 28-01-2014,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைகளில் அடைத்து விடுகின்றனர்.
ஜெயலலிதா முயற்சி
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
                                                                                        மேலும், . . . . .

டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்

சென்னை, ஜனவரி, 28-01-2014,
டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும் தங்கள் வேட்பு மனுவுடன் தங்களிடமுள்ள சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளனர்.
வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பு
டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க. வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், தங்களிடமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் குறிப்பிட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:–
                                                                               மேலும், . . . .

அந்தமான் தீவு படகு விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன காயம் அடைந்தவர்களும் விமானத்தில் வந்தனர்
சென்னை, ஜனவரி, 28-01-2014,
அந்தமான் தீவு படகு விபத்தில் பலியானவர்கள் உடல்கள், அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. காயம் அடைந்தவர்களும் விமானத்தில் வந்தனர்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
படகு விபத்து
அந்தமான் யூனியன் பிரதேசம், போர்ட் பிளேரில் உள்ள பே ஐலண்ட் அருகில் நேற்று மாலை விபத்துக்குள்ளாகிய தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரை போர்ட் பிளேருக்கு அனுப்பி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
                                                                                        மேலும், . . . .

No comments:

Post a Comment