இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,
21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடி ஏற்றினார் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலம் பலத்த பாதுகாப்புடன் கண்கவர் அணிவகுப்பு
போர் நினைவிடத்தில் மரியாதை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 65–வது குடியரசு தினம், தாய்நாட்டுப்பற்றுடனும், வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நேற்று கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ‘இந்தியா கேட்’டில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னம் அமர்ஜவான்ஜோதியில் பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, முப்படைத்தளபதிகள் உடனிருந்தனர்.
மேலும், . . .
அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து 31 பேர் பலி காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்களும் இறந்த பரிதாபம்
சுற்றுலா பயணிகள்
அவர்கள் தெற்கு அந்தமான் மாவட்டத்தில் புரோத்தரபூர் என்ற இடத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். அந்தமான்–நிக்கோபார் பல தீவு கூட்டங்களை கொண்டது ஆகும். நேற்று மாலை அவர்கள் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள தீவுக்கு ‘அக்குவா மெரைன்’ என்ற சுற்றுலா படகில் சென்றனர்.
அந்த படகில் அவர்களுடன் மும்பையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இருந்தனர். 45–க்கும் அதிகமான பேர் அதில் பயணம் செய்தனர்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்தது
தலைநகர் போர்ட்பிளேர் அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அந்த படகு தள்ளாடியது. கண் இமைக்கும் நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்தவர்கள் அலறினார்கள்.
மேலும், . . . .
இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன? நரேந்திர மோடி விளக்கம்
வலைத்தளத்தில் மோடி
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி தனது வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:–
நாம் 65–வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் நமது நாடு குடியரசு ஆனது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.
‘மோடி எல்லாம் சரிதான், இந்தியாவை பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று பலரும் நீண்ட தலையங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னை கேட்டிருக்கிறார்கள்.
மேலும், . . . .
21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடி ஏற்றினார் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலம் பலத்த பாதுகாப்புடன் கண்கவர் அணிவகுப்பு
புதுடெல்லி, ஜனவரி, 27-01-2014,
டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. 21
குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடியை ஏற்றினார். பலத்த
பாதுகாப்புடன் நடந்த கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.போர் நினைவிடத்தில் மரியாதை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 65–வது குடியரசு தினம், தாய்நாட்டுப்பற்றுடனும், வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நேற்று கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ‘இந்தியா கேட்’டில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னம் அமர்ஜவான்ஜோதியில் பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, முப்படைத்தளபதிகள் உடனிருந்தனர்.
மேலும், . . .
அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து 31 பேர் பலி காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்களும் இறந்த பரிதாபம்
போர்ட்பிளேர், ஜனவரி, 27-01-2014,
குடியரசு தின விடுமுறையையொட்டி காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரு குழுவாக அந்தமானுக்கு சுற்றுலா சென்றனர்.சுற்றுலா பயணிகள்
அவர்கள் தெற்கு அந்தமான் மாவட்டத்தில் புரோத்தரபூர் என்ற இடத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். அந்தமான்–நிக்கோபார் பல தீவு கூட்டங்களை கொண்டது ஆகும். நேற்று மாலை அவர்கள் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள தீவுக்கு ‘அக்குவா மெரைன்’ என்ற சுற்றுலா படகில் சென்றனர்.
அந்த படகில் அவர்களுடன் மும்பையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இருந்தனர். 45–க்கும் அதிகமான பேர் அதில் பயணம் செய்தனர்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்தது
தலைநகர் போர்ட்பிளேர் அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அந்த படகு தள்ளாடியது. கண் இமைக்கும் நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்தவர்கள் அலறினார்கள்.
மேலும், . . . .
இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன? நரேந்திர மோடி விளக்கம்
காந்திநகர், ஜனவரி, 27-01-2014,
இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் குறித்து நரேந்திர மோடி தனது வலைத்தளத்தில் விளக்கி உள்ளார்.வலைத்தளத்தில் மோடி
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி தனது வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:–
நாம் 65–வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் நமது நாடு குடியரசு ஆனது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.
‘மோடி எல்லாம் சரிதான், இந்தியாவை பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று பலரும் நீண்ட தலையங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னை கேட்டிருக்கிறார்கள்.
மேலும், . . . .
No comments:
Post a Comment