Tuesday 21 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2014) மாலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் விடிய, விடிய தர்ணா போராட்டம் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
புதுடெல்லி, ஜனவரி, 21–01-2014,
டெல்லிக்கு இந்த மாத தொடக்கத்தில் சுற்றுலா வந்த டென்மார்க் பெண் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்காக 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய உள்துறை அதை நிராகரித்தது.
இதையடுத்து 4 போலீசாரை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும். போலீசாரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு தர வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நேற்று போராட்டத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தலைவரும், முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலே போராட்டத்துக்கு தலைமை தாங்கியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
                                                                                                               மேலும், . . . . 

அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு பீகார், ஜார்க்கண்டில் பா.ஜ.க. முந்துகிறது - கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடெல்லி, ஜனவரி, 21–01-2014,
பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று மாநிலம் வாரியாக ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஓடிசா ஆகிய 4 மாநில கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளை முந்தும் நிலை இருப்பது தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
                                                                                                                                           மேலும், . . 

உத்தரப்பிரதேசத்தில் நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரசாரம்
லக்னோ, ஜனவரி, 21–01-2014,
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே பல இடங்களில் பேசிய அவர் அங்கு மீண்டும் பிரசாரம் செய்ய செல்கிறார். நாளை மறுநாள் (23–ந்தேதி) கோரத்பூரில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு நரேந்திர மோடி உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேசுவார் என்று மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேசம் என்றாலே பாரதீய ஜனதா ராமர் கோவில் விவகாரத்தைத்தான் கையில் எடுக்கும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் மோடியின் பிரசாரம் இருக்கும்.
                                                                                                                        மேலும், . . . 

No comments:

Post a Comment