Thursday 30 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்க மாநில வேலைவாய்ப்பு இணையதளம் தமிழக அரசின் புதிய திட்டம் பற்றி சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 31-01-2014
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.
அரசுக்கு பாராட்டு
தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டிய கவர்னர், அரசின் புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
வேலைதேடுவோர், வேலைவாய்ப்பு அளிப்போரை இணைக்கும் வகையில் மாநில வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்படும் என்று கவர்னர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
                                                                                                 மேலும், . . . . 

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பதவிஏற்று ஒரு மாதம் நிறைவு மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 31-01-2014,
டெல்லியில் ஆம் ஆத்மி பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததையொட்டி முதல்–மந்திரி கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரு மாதம் நிறைவு
டெல்லி முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்று, ஒரு மாதம் நிறைவடைந்தது. இதையொட்டி, தனது ஒரு மாத சாதனைகள் குறித்து கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எனது அரசின் ஒரு மாத கால செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருத்து கணிப்புகளும் இதையே தெரிவிக்கின்றன. நான் நிறைய அரசு அலுவலகங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதாக பொதுமக்கள் சொன்னார்கள். இது, டெலிபோன் புகார் சேவை தொடங்கியதால் ஏற்பட்ட விளைவாகும்.
                                                                                                                           மேலும், . . . .

250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் வைகோ அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 31-01-2014,
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
                                                                                              மேலும், . . . .

No comments:

Post a Comment