Tuesday 28 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள் அ.தி.மு.க - 4, தி.மு.க - 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 1

சென்னை, ஜனவரி, 29-01-2014,
டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.
டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
                                                                                                                    மேலும், . . . .

இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையா? அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க இலங்கை நடவடிக்கை
வாஷிங்டன், ஜனவரி, 29-01-2014,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை முடியடிக்க, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கை திரட்டுகிறது.
போர்க்குற்றங்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009–ம் ஆண்டு உச்சகட்டம் அடைந்தது. அப்போது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு போர்க்குற்றங்கள் அரங்கேறின.
                                                                                                         மேலும், . . . .

நெல்லையில் 7 சதவீத இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்


நெல்லை, ஜனவரி, 29-01-2014,
முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லையில் திரளான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சிறை நிரப்பும் போராட்டம்
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீதமும், தமிழக அரசு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
                                                                                            மேலும், . . . .

No comments:

Post a Comment