Saturday 25 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தை சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்
சென்னை, ஜனவரி, 26-01-2014,
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 25 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருதினை வழங்குகிறார்.
ஜனாதிபதி விருது
மாநில காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலானவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதன் மூலம் காவல்துறையை சேர்ந்தவர்களை கவுரவிப்பதுடன், அவர்களை மேலும் சிறப்பாக பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன்.
                                                                                                மேலும், . . . . 

நிலையான ஆட்சி அமைக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் குடியரசு தின விழா பேச்சு
புதுடெல்லி, ஜனவரி, 26-01-2014,
2014, ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கும் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வருகிற தேர்தல்களில் நிலையான அரசை தேர்ந்து எடுக்கும்படி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரணாப் முகர்ஜி உரை
குடியரசு தின விழாவையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது–
                                                                                       மேலும், . . . . 

272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற பாடுபடுங்கள் பா.ஜனதாவினருக்கு நரேந்திர மோடி அழைப்பு
காந்திநகர், ஜனவரி, 26-01-2014,
வாக்காளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள், 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ‘மிஷன் 272 பிளஸ்’ திட்டம் வெற்றிபெற பாடுபடுங்கள் என்று பா.ஜனதாவினருக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்காளர் தினம்
வாக்காளர் தினத்தையொட்டி, குஜராத் மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
ஓட்டு என்பது வாக்காளர்களின் கையில் உள்ள மிகப்பெரிய ஆயுதம். அதன் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஓட்டுப்பெட்டியின் முன்பு, எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சாதாரணமானவர்கள் தான் என்று வாக்காளர்கள் காட்ட வேண்டும்.
                                                                                        மேலும், . . . 

No comments:

Post a Comment