Sunday 12 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தற்போது விற்பனையில். . . . .



‘சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்துவிட்டது’ நரேந்திர மோடி தாக்கு
பனாஜி, ஜனவரி, 13-01-2014,
சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார்.
உள்துறை மந்திரியின் கடிதம்
கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்?
                                                                                                             மேலும், . . . 

‘என்னையும், தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது’ பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு
சென்னை, ஜனவரி, 13-01-2014,
என்னையும், தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என்று தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசினார்.
பொங்கல் விழா
தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, மஞ்சள் குலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
                                                                                                                மேலும், . . . 

தமிழகத்தில் இளம்வயது பெண்கள் 900 பேர் காணவில்லை - பெற்றோர் கலக்கம்
சென்னை, ஜனவரி, 13-01-2014,
தமிழக போலீசில், 2013ம் ஆண்டு, 2,999 பேரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 900 பேர் இளம்பெண்கள். குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், சொத்து பிரச்னையால் துரத்தப்பட்டோர், குடும்ப தகராறு காரணமாக தலைமறைவானவர், பிடிக்காத திருமணத்தால் வீட்டை விட்டு ஓடிய பெண், ஏழ்மையால் குடும்பத்தில் இருந்து துரத்தப்பட்டோர் என, பல்வேறு காரணங்களால் மாயமானதாக, புகார்கள் அதிகரித்து வருகின்றன.
30 சதவீதம் அதிகரிப்பு
கடந்த, 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த புகார்கள், 2013ல், 30 சதவீதம் அதிகரித்து உள்ளன.போலீஸ் இணையதள தகவல்படி, தமிழகம் முழுவதும், 2013 ஜனவரி, 1ம் தேதி துவங்கி, டிச., 29 வரை, 2,999 பேர் காணவில்லை என, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
                                                                                              மேலும், . . . . 


No comments:

Post a Comment