Monday 13 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,



அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட முறைகேடை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தென்காசி, ஜனவரி, 14-01-2014,
நெல்லை மாவட்டம் தென்காசியில் அரசு தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி மையத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு முன்முயற்சி திட்டத்தின் கீழ் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்து, அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது.
                                                                                          மேலும், . . . . 

தமிழ்நாட்டில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க டெல்லி மேல்–சபைக்கு பிப்ரவரி 7–ந் தேதி தேர்தல் 21–ந்தேதி மனுதாக்கல் தொடங்குகிறது



சென்னை, ஜனவரி, 14-01-2014,
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க டெல்லி மேல்–சபைக்கு பிப்ரவரி 7–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 21–ந்தேதி தொடங்குகிறது.
லோக் சபா–ராஜ்யசபா
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, டெல்லி பாராளுமன்றத்தில் லோக்சபா என்ற மக்களவையும், ராஜ்யசபா என்ற மாநிலங்கள் அவையும் செயல்படுகிறது. லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆகும்.

                                                                                                                 மேலும், . . . .

ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை எதிரொலி இலங்கை சிறையில் இருந்த 163 தமிழக மீனவர்கள் விடுதலை படகுகளுடன் ஊர் திரும்புகிறார்கள்


சென்னை, ஜனவரி, 14-01-2014,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மீனவர்கள் சிறைபிடிப்பு
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது பாரதப்பிரதமருக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்து 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட போதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும், 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.
இருநாட்டு மீனவர்கள் கூட்டம்
தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளை சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்றும்,
                                                                                                          மேலும், . . . . 

No comments:

Post a Comment