Wednesday 21 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (22-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (22-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு

பேரையூர், ஜனவரி, 22-01-2015,
போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பெண் போலீஸ்காரர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சலுப்பபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் கருப்பாயி (வயது 32). இவர் கடந்த 2005-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு கருப்பாயிக்கும், அவருடைய தாய் மாமாவான பெத்தண்ணசாமி (35) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
                                                                                                                        மேலும், . . . .

அம்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகை தேர்தல் கமிஷன் ‘கெடுபிடி’

சென்னை, ஜனவரி, 22-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி வருகை தர இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
போலீஸ் பார்வையாளர்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான செலவீன பார்வையாளராக ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஸ்ரீதரதோரா ஏற்கனவே வந்துள்ளார். 22-ந் தேதி பொதுப்பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பல்கார் சிங் வருகிறார்.
இவர்கள் தவிர, போலீஸ் பார்வையாளராக அசாமைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினோத்குமார் இந்த வாரத்தில் வந்து சேருவார்.
                                                                                                                      மேலும், . . . .

கடை உரிமையாளரை கொன்று நகை கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பூந்தமல்லி, ஜனவரி, 22-01-2015,
நகை வாங்குவது போல் நடித்து நகை கடை உரிமையாளரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
நகை கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூராராம் (வயது 65). இவருடைய மகன்கள் கானாராம் (30), குணாராம் என்ற கணேஷ் (28). இவர்கள் கடந்த பல வருடங்களாக மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த 14-4-2012 அன்று கடையில் கணேஷ் மட்டும் தனியாக இருந்தார். அண்ணன் கானாராம் வேலை காரணமாக வெளியே சென்று விட்டார்.
                                                                                                                 மேலும், . . . .

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செங்கல்பட்டு கோர்ட்டில் ஒருவர் சரண்


பூந்தமல்லி, ஜனவரி, 22-01-2015,
பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் கண் எதிரே கைதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கைதி வெட்டிக்கொலை
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜன் (வயது 34). இவர், கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவரின் மனைவியை கிண்டல் செய்தபோது ஏற்பட்ட தகராறில் முருகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் வரதன் மீது உள்ளது.
                                                                                                                     மேலும், . . . . 

No comments:

Post a Comment