Tuesday 27 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை: ‘நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன்’ கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை, ஜனவரி, 28-01-2015,
நான் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன் என்று கைதான ராணுவ வீரர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகராறு
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்த ஏ.தொட்டியபட்டியில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 35) டெல்லியில் ராணுவவீரராக பணி புரிந்தார். இவருக்கும் கோமதிக்கும் (28) 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கோமதி கணவருடன் சேர்ந்து வாழாமல், மங்கள்ரேவு கிராமத்தில் தந்தை சின்னச்சாமியுடன் (முன்னாள் ராணுவவீரர்) வசித்து வந்தார். சேர்ந்து வாழ வருமாறு கமலக்கண்ணன் பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஏ.தொட்டியபட்டியில் கோமதியின் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கமலக்கண்ணனும் கோமதி மற்றும் அவரது தந்தை சின்னச்சாமி, தாயார் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
5 பேர் வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணனும் அவரது தம்பி பரமசுந்தரமும் (28) சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கோமதி,
                                                                                                   மேலும், . . . . 

ஆசிரியையிடம் நகை பறித்தது எப்படி? கொள்ளையன் நீராவி முருகன் நடித்துக் காட்டினான் அருகில் நின்ற ஆசிரியையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்

ஆலந்தூர், ஜனவரி, 28-01-2015,
சென்னை துரைப்பாக்கத்தில் கத்திமுனையில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி? என்று கொள்ளையன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினான்.
அப்போது அங்கு நின்ற பள்ளி ஆசிரியையின் காலில் விழுந்து கொள்ளையன் மன்னிப்பு கேட்டான்.
வலைத்தளத்தில் பரவிய கொள்ளை காட்சிகள்
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் (42). இவரது மனைவி வேலம் (37) தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி அன்று மாலை வேலை முடிந்த வேலம், ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்த 2 பேர்களில் ஒருவன், ஆசிரியை வேலத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 14 பவுன் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை
                                                                                                      மேலும், . .. .  .
ஸ்ரீரங்கம் தொகுதியில் மனுத்தாக்கல் முடிந்தது 46 பேர் வேட்பு மனு மனுவை வாபஸ் பெற 30-ந் தேதி கடைசி நாள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று முடிந்தது. மொத்தம் 46பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி, ஜனவரி, 28-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
அ.தி.மு.க-தி.மு.க.
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அன்றைய தினமே ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. வேட்பாளர் ஆனந்த், சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே அலுவலகத்தில் பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் கடந்த 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இறுதி நாள்
கடந்த 24-ந்தேதி வரை இரண்டு அலுவலகங்களிலும் சேர்த்து 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்,
                                                                                               மேலும், . . . . .

இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் முடிந்தது பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி ‘நமஸ்தே’ என்று கூறி விடை பெற்றார்

புதுடெல்லி, ஜனவரி, 28-01-2015,
இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒபாமா, பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். ‘நமஸ்தே’ என்று கூறி அவர் விடை பெற்றார்.
சவுதி அரேபியா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக, அங்கிருந்து நேரடியாக டெல்லி பாலம் விமானப்படை தளத்துக்கு சென்றார்.
அங்கு தயாராக நின்றிருந்த தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார்.
                                                                                           மேலும், . . . .

No comments:

Post a Comment