Friday 19 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மதுரையில் பயங்கரம் ஒரே வீட்டிற்குள் 3 வாலிபர்கள் வெட்டிக்கொலை





மதுரை, செப்டம்பர், 20-09-2014,
மதுரையில் ஒரே வீட்டிற்குள் 3 வாலிபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
நேற்று பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கட்டிட வேலை
மதுரை ஜெய்ந்துபுரம், ஜீவாநகர், மீனாம்பிகை நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் குண்டுமலை. இவருடைய மனைவி இருளாயி, கொய்யாபழம் விற்று வருகிறார்.
இந்த தம்பதியரின் மகன்கள் கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ் (19). இவர்கள் இருவரும் கோவையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவலன் நகரைச் சேர்ந்த ரவுடி சவுந்தரை கொலை செய்ய முயன்றதாக கருப்புராஜ் மீது ஜெய்ந்துபுரம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தப்பிப் பிழைத்த சவுந்தர், தன்னை கொல்ல வந்த கருப்புராஜ் உள்ளிட்ட சிலரை கொலை செய்ய திட்டமிட்டார்.
டி.வி. பார்த்தபோது...
இதை அறிந்த கருப்புராஜ், மதுரையில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று கருதி, தன் தம்பியுடன் கோவைக்குச் சென்று விட்டார்.
                                                                                                      மேலும், . . .

பாகிஸ்தான் உளவாளியின் காதலி கைதாவாரா? போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கதறி அழுதார்

சென்னை, செப்டம்பர், 20-09-2014,
சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளியின் காதலி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய புலனாய்வுப்படை போலீசார், அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கதறி அழுதார்.
உளவாளிகள் கைது
தமிழகத்தில் புகுந்து நாசவேலை செய்ய, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.உளவு நிறுவனம், தமிழகத்தில் உளவு பார்க்க அனுப்பிய உளவாளிகள் தொடர்ந்து கைதான வண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார்.
                                                                                                        மேலும், . . .

துப்பாக்கியால் சுட்டும், துண்டு-துண்டாக வெட்டியும் தீர்த்துக்கட்டினார்கள் சென்னை கார் டிரைவர்கள் 4 பேர் கடத்திக்கொலை போலீஸ் அதிகாரியின் உதவியுடன் செயல்படும் பயங்கர கும்பல் பற்றி அதிர்ச்சி தகவல்கள்

சென்னை, செப்டம்பர், 20-09-2014,
சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர்கள் 4 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை நெரித்தும், துண்டு-துண்டாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலைகளை போலீஸ் அதிகாரி ஒருவரின் துணையோடு, பயங்கர கும்பல் அரங்கேற்றி உள்ளது.
அதிரடி கொலைகள்
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் தனியாக செல்லும் கார் டிரைவர்கள், கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. சென்னையில் இருந்து லாரி, கார், வேன்களை ஓட்டிச் சென்ற டிரைவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 3 கொலைகளை ஒரே கும்பல் செய்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் இருந்து, காரில் தோல்களை ஏற்றிச்சென்ற டிரைவர் வாசிம்அக்ரம், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
                                                                                                    மேலும், . . .

உடல் நலக்குறைவு காரணமாக பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மரணம் பிரதமர் அனுதாபம்

சென்னை, செப்டம்பர், 20-09-2014,
மாண்டலின் இசைக்கருவியில் கர்நாடக இசையை மீட்டி சாதனை படைத்த பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.
45 வயது மாண்டலின் சீனிவாஸ்
மாண்டலின் சீனிவாஸ் கல்லீரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.
மாண்டலின் சீனிவாஸ் 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி ஆந்திராவில் உள்ள பாலகோலில் பிறந்தார்.
                                                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment