Sunday 21 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 பயங்கர ஆயுதங்களுடன் எல்லையில் காத்து இருக்கிறார்கள் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் முறியடிக்க ராணுவம் தயார் நிலை
ஸ்ரீநகர், செப்டம்பர், 21-09-2014,
காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் 200 தீவிரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஷ்மீரில் ஊடுருவல்
பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாம்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய பகுதிக்குள் அடிக்கடி ஊடுருவி நாச வேலைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்காக காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் அவர் களை இந்திய ராணுவம் அவ்வப்போது விரட்டியடித்து வருகிறது. மேலும் சில நேரங்களில் ராணுவத்துடன் நடக்கும் மோதல்களில் அவர்கள் கொல் லப்பட்டு வருகின்றனர்.
200 தீவிரவாதிகள்
இந்தநிலையில் காஷ்மீரில் ஊடுருவுவதற்காக 200 தீவிரவாதிகள் தற்போதும் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
                                                                                                                    மேலும், . . . .

காஷ்மீரை மீட்கப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு இந்தியா கடும் கண்டனம் ‘காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

காஷ்மீரை மீட்கப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பேசி இருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத், செப்டம்பர், 21-09-2014,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியரின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி.
25 வயதான இவர் பாகிஸ்தான் மக்கள்கட்சியின் இணைத் தலைவராக உள்ளார்.
தேர்தலில் போட்டியிட திட்டம்
கடந்த ஆண்டு அங்கு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. அடுத்து, 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு வழி நடத்த இப்போதே பிலாவல் தயார் ஆகி வருகிறார்.
இது தொடர்பாகசமீபத்தில் கராச்சியில் பத்திரிகையாளர்களை பிலாவல் சந்தித்து பேசினார்.
                                                                                                        மேலும், . . . .

ஆவின் பாலை திருடி கலப்படம் செய்த வழக்கு கைதான முக்கிய குற்றவாளி வீட்டில் அதிரடி சோதனை ஆதாரங்கள் சிக்கியதாக போலீசார் தகவல்

சென்னை, செப்டம்பர், 21-09-2014,
ஆவின் நிறுவனத்துக்கு கொண்டுசெல்லும் பாலை திருடி, அதற்கு பதில் தண்ணீரை கலந்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆதாரங்களை கைப்பற்றினர்.
பால் திருட்டு
விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகேயுள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து பால்களை திருடி, அதற்கு பதில் தண்ணீர் கலப்பதை வெள்ளிமேடு போலீஸ் நிலைய போலீசார் கண்டு பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பலரை கைது செய்தனர்.
8 பேர் கைது
பாலில் தண்ணீர் கலக்கும் மோசடி, திண்டிவனம் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் நடந்துள்ளது என்று தெரியவந்ததை தொடர்ந்து,
                                                                                                                மேலும், . . . .

முதலாம் உலகப் போரின்போது சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவு



சென்னை, செப்டம்பர், 21-09-2014,
முதலாம் உலகப் போரின்போது, சென்னை நகரை ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசி தாக்கிய தினம் நாளையுடன் 100-வது ஆண்டை நிறைவு செய்கிறது.
முதலாம் உலகப்போர்
உலகத்தையே உலுக்கிய முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற்றது. இந்தப் போரானது, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.
முதலாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தையும் அமைத்திருந்தனர்.
எம்டன் போர்க்கப்பல்
பெரும்பாலான ஆங்கிலேயர்கள் சென்னையில் வாழ்ந்ததால், ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து இடம்பெற்றிருந்த நேச நாடுகளின் கையே ஓங்கியிருந்தாலும், அவர்களின் ஆளுகையில் உள்ள ஒருசில இடங்களையாவது தாக்கிவிட வேண்டும் என்று ஜெர்மனி நினைத்தது.
தாக்குதலை நடத்த அவர்கள் தேர்வு செய்த இடம் சென்னை. அதற்காக, ஜெர்மனியின் கடற்படைக்கு சொந்தமான எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற நவீன போர்க் கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையை நோக்கி வீரர்கள் விரைந்தனர். அந்த கப்பலில், தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் என்ற வீரரும் இடம்பெற்றிருந்தார்.
இந்தியாவை மீட்க
ஜெர்மனி நாட்டின் போர் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்து பிடியில் இருந்து தாய் நாடான இந்தியாவை மீட்க வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டிருந்தார்.
                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment