Tuesday 23 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

11 ஆண்டுகளாக ஆந்திராவை கலங்கடித்த சர்வதேச செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது

நகரி, செப்டம்பர், 24-09-2014,
ஆந்திர மாநிலத்தை கலக்கிய பிரபல செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
செம்மரக்கடத்தல் மன்னன் கைது
ஆந்திர மாநில வனப்பகுதிகளில் சமீப காலமாக செம்மரங்களை வெட்டி கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை பண ஆசை காட்டி செம்மரங்களை கடத்தி வருகின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலால் ஆந்திர மாநிலத்தை கலங்கடித்து வந்தவர் மலியக்கல் மூசா. தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை துறைமுகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.
                                                                                                                          மேலும், . . . . 

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் கைது


மதுரை, செப்டம்பர், 24-09-2014,
மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகளும், உறவினர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2-ந் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து,
                                                                                              மேலும், . . .

மராட்டிய சட்டசபை தேர்தல்: சிவசேனா-பாரதீய ஜனதா கூட்டணி உறுதியானது தொகுதி பங்கீடு விவரம் விரைவில் வெளியாகும்
மும்பை, செப்டம்பர், 24-09-2014,
மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவசேனா-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு விவரம் விரைவில் வெளியாகும்.
தொகுதி பங்கீட்டில் சிக்கல்
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான எதிர்கட்சிகளான சிவசேனா-பாரதீய ஜனதா கூட்டணி திட்டம் வகுத்து வருகிறது.
இந்த இரு கட்சிகளும், ஆளும் கட்சியினருக்கு மிக பெரிய சவாலாக திகழ்ந்து வரும் இந்த சூழ்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனா-பா.ஜனதா இடையே ஒருமித்த உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
பா.ஜனதா யோசனை
ஏனெனில், பா.ஜனதாவை விட அதிகமான தொகுதிகளில் அதாவது 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதில் சிவசேனா முனைப்பு காட்டுகிறது.
                                                                                                           மேலும், . . . .

‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, செப்டம்பர், 24-09-2014,
நாடு முழுவதும் போலீசாரால் நடத்தப்படும் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, 11 நெறிமுறைகளை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது.
மும்பை கோர்ட்டில் மனு
மக்கள் உரிமைக் கழகம் அமைப்பின் சார்பில், ‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் நெறிமுறைகளை வகுக்குமாறு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் 1995-ம் ஆண்டில் இருந்து 1997 வரை மும்பை போலீசாருக்கும், கிரிமினல்களுக்கும் இடையில் நடைபெற்ற 99 ‘என்கவுன்டர்’களில் 135 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்கவுன்டர்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் பெயர், எந்த சந்தர்ப்பத்தில் என்கவுன்டர்கள் நடைபெற்றன போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, ‘என்கவுன்டர்’ நடவடிக்கை தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை போலீசுக்கு வலியுறுத்தியது.
                                                                                          மேலும், . . . . 

No comments:

Post a Comment