Monday 29 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
 போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடின கல்வீச்சு-மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது


போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சு, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். என்றபோதிலும் தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடின.
சென்னை, டிசம்பர், 30-12-2014,
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் நேற்று முன்தினமே எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் பாதிப்பு
இந்த திடீர் போராட்டத்தால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியது.
                                                                                                                    மேலும், . . . . .

பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான பெண்ணின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்


பெங்களூரு, டிசம்பர், 30-12-2014,
பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் உடல் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை பெண் பலி
பெங்களூரு நகருக்கு தீவிரவாதிகளால் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நகரின் இதயம் போன்ற பகுதியான எம்.ஜி.ரோடு அருகே சர்ச் தெருவில் உள்ள தனியார் ஓட்டல் முன்புள்ள நடைபாதையில் குண்டுவெடித்து சிதறியது.
இதில், சென்னையை சேர்ந்த பவானி (வயது 38), அவரது கணவரின் அண்ணன் மகன் கார்த்திக், கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்தீப் மற்றும் வினய் ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பவானி நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மகன், மகள் கண்ணீர்
இதுபற்றி அறிந்ததும் சென்னையில் இருந்து பவானியின் கணவரான பாலன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.
                                                                                                  மேலும், . . . . .

நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்யவில்லை பிடிபட்ட வாலிபர் வாக்குமூலம்

ஆலந்தூர், டிசம்பர், 30-12-2014,
நீலாங்கரை அருகே கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என பிடிபட்ட காரைக்கால் வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கல்லூரி மாணவி
சென்னையை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த கயல்(வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த கவுதம்(19-பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த 22-ந்தேதி மாலை கவுதம் தனது காதலி கயலுடன் நீலாங்கரை அருகே உள்ள கடற்கரைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி மிரட்டி கயலை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலிபர் வாக்குமூலம்
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் அருண் தலைமையில் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர்கள் முகமது அஸ்லாம், சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கிருஷ்ணன், பாஸ்கர், சேகர்பாபு, சிவக்குமார், ரவீந்திரன், நாகராஜ், அகிலா ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோழிங்கநல்லூரில்
                                                                                                      மேலும், . . . . 

தமிழ்நாட்டில் 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, டிசம்பர், 30-12-2014,
தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூண்டி விடுகிறார்
2006 முதல் 2011 வரை மைனாரிட்டி அரசுக்கு தலைமை தாங்கி ஆட்சி நடத்தி போக்குவரத்து துறையை சீரழித்து விட்டுச் சென்ற கருணாநிதி இன்றைக்கு போக்குவரத்துக் கழகங்களில் மைனாரிட்டி நிலையில் உள்ள தி.மு.க.வைச் சார்ந்த தொழிற்சங்கமான தொ.மு.ச.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றினை கடந்த 28-ந்தேதி வெளியிட்டுள்ளார்.
வெறும் 13.96 சதவீத உறுப்பினர்களைக் கொண்டுள்ள தொ.மு.ச-வைச் சார்ந்த பணியாளர்களை தூண்டிவிட்டு சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வைத்த கருணாநிதி தனது அறிக்கையில் இந்த அரசை குறை கூறி கண்டித்துள்ளார். தி.மு.க.வைச் சார்ந்த தொ.மு.ச.வினர் சட்ட விரோதமாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதை மறைக்கும் விதமாகவே இது போன்ற ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
சொந்தமான சொத்துக்கள்
ஜெயலலிதா 3-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாயாகும். பணியிலிருந்து ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 922 கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்கியவர் ஜெயலலிதா தான். போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டிருந்தன.
194 பேருந்துகள் விபத்து இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டிருந்தன.
                                                                                           மேலும், . . . . . 

No comments:

Post a Comment