Thursday 5 June 2014

திரை(மறைவு)ச் செய்திகள் (05-06-2014)

திரை(மறைவு)ச் செய்திகள் (05-06-2014) மாலை, IST- 07.30 மணி,நிலவரப்படி,

மற்ற நடிகைகளின் வாய்ப்பை தட்டி பறிக்கும் நடிகை!

தெற்கே இருந்து வடக்கே போயிருக்கும் வீர நடிகை, இந்திப் பட வாய்ப்புகளை பெறுவதில் மும்முரமாக இருக்கிறாராம். மற்ற கதாநாயகிகளுக்கான வாய்ப்புகளை எல்லாம் இவர் தட்டிப் பறிக்கிறாராம்.
சமீபத்தில், கரீன நடிகைக்கு போக வேண்டிய ஒரு பட வாய்ப்பை வீர நடிகை தட்டிப் பறித்து விட்டாராம். இந்திப் பட உலகில் இப்போது இது தான் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகின்றதாம்!
நடிகரை பாராட்டி தள்ளும் நடிகை!

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கும் நடிகை, தற்போது சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறாராம். அப்படத்தின் படப்பிடிப்பின் போது நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறாராம். அதுமட்டுமில்லாமல் சூப்பர் நடிகருடன் நடித்த அனுபவங்களை பாலிவுட்டில் இருப்பவர்களிடம் நடிகரைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறாராம்.
நடிகைக்கு சிபாரிசு செய்யும் நடிகை!

சம்மந்தமான நடிகையுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாராம் சகுனியான நடிகை. அப்படத்தில் இருந்து இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாம். அதன்பிறகு சம்மந்தமான நடிகை நடிக்கும் படத்தில் இன்னொரு கதாநாயகி தேவைப் பட்டபோது சகுனியான நடிகையை சிபாரிசு செய்தாராம். தற்போது நடிக்கும் ஒரு படத்திலும் நடிகைக்காக இயக்குனரிடம் பேசி சிபாரிசு செய்துள்ளாராம்.
வழக்கமாக நடிகைகள் சான்ஸ் பிடிக்க நடிகர்களுடன் நெருங்கி பழகுவார்களாம். ஆனால் சகுனியான நடிகையோ நடிகையுடன் நெருங்கி பழகி வாய்ப்புகள் வாங்குகிறாராம்.
நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை!

பத்து வருடமாக கதாநாயகியாக நடித்து வரும் மூணுசா நாயகியிடம், சுமார் மூஞ்சி குமார் நடிகருடன் ஜோடியாக நடிக்க இயக்குனர் ஒருவர் அணுகினாராம்.
ஆனால் நாயகியோ சுமார் மூஞ்சி குமார் நடிகருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம். இதனால் இயக்குனர் வேறு நாயகியை தேடி வருகிறாராம்.
பட வாய்ப்புகளை தேடும் சகோதரிகள்!

தளபதி நடிகருடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகைக்கு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் படங்கள் குறைந்து விட்டதாம். அதனால் மும்பையில் இருந்த தங்கை நடிகையை வரவழைத்து பட உலகில் நட்புடன் பழக விட்டாராம். இருப்பினும் பலன் கிடைக்கவில்லையாம்.
அதைத்தொடர்ந்து அக்காவும், தங்கையும் புதிய பட வாய்ப்புகளை தேடி, வேட்டையில் இறங்கி விட்டார்களாம். அக்கா ஒன்றரை கோடி சம்பளம் கேட்கிறாராம். தங்கை ஐம்பது லட்சம் கேட்கிறாராம். ஆக, ரூ.2 கோடி கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லையாம்!

No comments:

Post a Comment