Tuesday 24 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம்

சென்னை, 24-06-2014,

அமைச்சரவையிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், 26ம் தேதி அமாவாசை வருவதால், பதவியில் இருப்போர் கலக்கத்திலும், பதவியை எதிர்பார்ப்போர் கனவிலும் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றியை பெற்றாலும், தேர்தலில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சரவையில் செல்வாக்குடன் இருந்த,
                                                                                            மேலும்,  . . . . . 

சென்னையில் போலி பாஸ்போர்ட்- விசா தயாரிப்பு 6 பேர் கும்பல் கைது: பரபரப்பு தகவல்கள்

சென்னை, 24-06-2014,

சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அணி

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் கடந்த 82-ம் ஆண்டு, இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். அந்த தொழிலில் இவர் மன்னர். கடந்த 2003, மற்றும் 2005-ம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதுள்ள வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகிவிட்டார்.
                                                                                                     மேலும், . . . .  

ஆபாச வீடியோவை காட்டி, டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டலா? நடிகை நயனா பேட்டி

பெங்களூர், 24-06-2014,

ஆபாச வீடியோவை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று நடிகை நயனா தெரிவித்து உள்ளார்.

பெங்களூர் கன்னிகாம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர், பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சியை வெளியிடுவதாக கூறி அவரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கே.ஜி.நகர் போலீஸ் ஏட்டு மல்லேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                              மேலும், . . . . 

கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

கரூர், 23-06-2014,

கரூர் அருகே வேலைக்கு சென்ற 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் வினிதா (வயது 17). இவர் பிளஸ்–2 முடித்து விட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார். விடுமுறை நாட்களில் வினிதா கரூரில் உள்ள கொசு வலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து கிருஷ்ணராயபுரத்துக்கு சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் கரூருக்கு வினிதா வேலைக்கு சென்று வந்தார்.
                                                                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment