Sunday 15 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-06-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

சொத்து பத்திரம்–நகைக்காக சென்னை பெண் டாக்டரை கொன்ற கார் டிரைவர்

வில்லிவாக்கம், ஜூன். 15–06-2014,
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் வசித்தவர் டாக்டர் மல்லிகா (63). ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மத்திய அரசு ஆஸ்பத்திரியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
மகள் ரோகிணி பிரியாவுடன் முகப்பேரில் வசித்து வந்தார். ரோகிணி பிரியா சென்னையில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார். மூத்த மகள் ஹரிணி அமெரிக்காவில் இருக்கிறார்.
மல்லிகாவுக்கு சொந்தமான நிலம் திருப்போரூர் பகுதியில் உள்ளது. அதனை விற்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஒரு நபரை சந்தித்து பேச முடிவு செய்து இருந்தார்.
கடந்த 12–ந்தேதி காலை தனது காரில் நிலம் விற்பனை தொடர்பாக அந்த நபரை சந்தித்து பேச புறப்பட்டார். அவருடன் வேலைக்காரி சத்யாவும் சென்றார்.
                                                                                       மேலும், . . . .

மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். மையத்தில் காவலாளி படுகொலை

திருப்போரூர், ஜூன்.15–06-2014,
மாமல்லபுரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கிருஷ்ணன்காரணை கிராமம் உள்ளது. இங்கு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அதனுடன் இணைந்த ஏ.டி.எம். மையமும் உள்ளது. இங்கு முருகன் (வயது 54) இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு முருகன் ஏ.டி.எம். மையத்தில் பணியில் இருந்தார். இரவு 12 மணியானதும் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி விட்டு வாசல் அருகில் தூங்கினார். ஏ.டி.எம். சாவியை தலையணையின் அடியில் வைத்திருந்தார்.
நள்ளிரவில் திடீரென்று கொள்ளையர்கள் சிலர் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தின் சாவியை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்தார்.
                                                                                              மேலும், . . . .

முன்னாள் காதலருக்கு எதிராக புகார் பூகம்பத்தை கிளப்பிய பிரீத்தி ஜிந்தா

மும்பை, ஜூன், 15–06-2014,
குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்... எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள்.
பஞ்சாப் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விடும்போதும் மைதானத்தில் இருக்கும் கேமராக்கள் அதனை படம் பிடிக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பிரீத்தியின் பக்கம் திரும்பி அவரது உணர்ச்சிகரமான துள்ளல் கொண்டாட்டங்களை பதிவு செய்ய தவறுவ தில்லை.
அந்த அளவுக்கு ஐ.பி.எல். சீசனில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தவிர்க்க முடியாத உற்சாக நட்சத்திரமாகவே வலம் வந்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா.
தற்போது நடந்து முடிந்துள்ள 7–வது ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணியின், ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
                                                                                                  மேலும், . . . . 

எழும்பூரில் பெண் டாக்டர் கொலை: கொலையாளியை தேடும் தனிப்படை

சென்னை, ஜூன், 15–06-2014,
எழும்பூர் பி.வி.செரியன் சாலையில் 8 மாடி குடியிருப்பு உள்ளது. 8–வது மாடியில் உள்ள தனிவீட்டில் குடியிருந்த மூதாட்டி எம்மா (83). மனோ தத்துவ நிபுணர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது இங்கு வசித்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆக வில்லை. ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உள்ளனர். இவரது சகோதரர் ஸ்டான்லி இதே குடியிருப்பில் 7–வது மாடியில் வசிக்கிறார். 2 தங்கைகள் அமெரிக்காவிலும், ஒருவர் கேரளாவிலும் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு வீட்டு சாப்பாட்டு அறையில் மர்மமான முறையில் எம்மா இறந்து கிடந்தார். கம்ப்யூட்டர் மாயமாகி இருந்தது. நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. உடல் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவர் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள ரகசிய கேமிராவில் சில காட்சிகள் பதிவாகி இருந்தன. போலீசார் அதை ஆய்வு செய்தனர்.
                                                                                                                    மேலும், . . . 

No comments:

Post a Comment